இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் வேலுநாச்சியார் ஒருவர் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சிவகங்கையை ஆண்ட ராணி வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 3) பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்," ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார்.
காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்" என்று கூறியுள்ளார்.