விசாகப்பட்டினத்தில் இன்று அதிகாலை எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார்.
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எலமஞ்சிலி-துவ்வாடா பிரிவு வழியாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்றது. அப்போது பேன்ட்ரி காரின் பின்னால் இருந்த 2 ஏ.சி.பெட்டியில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பே அந்த இரண்டு பெட்டிகளும் முழுமையாக எரிந்து நாசமானது.
இந்த விபத்தில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற பயணி உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த விபத்து காரணமாக எலமஞ்சிலி வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன.