மிசா கைதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை
திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
திமுக முப்பெரும் விழா சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
விழாவில் கட்சிக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் ஸ்டாலின் ஆவேசமாக ஆற்றிய உரையில்,
என் மிசா கைதை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை; என் தியாகத்திற்கு மார்க் போட யாருக்கும் தகுதி இல்லை.
கொளத்தூர் தொகுதி மக்களுக்கு எனது
கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் சட்டமன்றத்தில் நடக்கும் கொடுமைகளை பார்க்க வைக்காமல் இருந்ததற்கு நன்றி.
தவெக ஆட்சியில் ரெண்டே ரெண்டுக்குதான் போட்டி... மின்வெட்டு, அரிவாள் வெட்டு.
எதிரி யார் என கணித்து பணியாற்றி இருந்தால் சட்டமன்ற தேர்தலில்
தோல்வியே ஏற்பட்டு இருக்காது.
நாங்க வட்டியும் முதலுமா திருப்பி கொடுக்க காத்திருக்கிறோம்.. சீக்கிரமா வரோம்.. திமிர் தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்புதான் இந்த இடைத்தேர்தல்.
த.வெ.கவிற்கு ஏதோ பெரிய அலை அடித்த மாதிரியும், தமிழ்நாடே அவர்களின் வருகைக்காக காத்திருந்த மாதிரியும் பில்டப் பண்றாங்க.
உண்மையில் அவர்கள் ஆட்சி நடப்பது எப்படி தெரியுமா..?
சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு மக்கள் முன்னிலையில் தினமும் முதல்வர் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆவேசமாக பேசினார்.