News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சினிமா

காலமானார் இயக்குநர் இமயம் பாரதிராஜா  

காலமானார் இயக்குநர் இமயம் பாரதிராஜா  
NEWS TODAY TAMIL
Updated on: 10 Jun 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

'இயக்குநர் இமயம்' என சினிமா ரசிகர்களால் போற்றப்படும் கரிசல் பூமிக்கு சொந்தக்காரர் பாரதிராஜா(84) காலமானார்.

 சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது உயிரிழந்துள்ளார்.


1977-ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தனது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார். சென்னையில் உள்ள பிரபல சினிமா ஸ்டுடியோக்களில் செட்டிங் போட்டு திரைப்படம் எடுத்து வந்த நிலையில் கிராமிய மனம் தமிழும் இயற்கை அழகில் கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கியவர். 

நடிகைகள் ராதிகா சரத்குமார், ராதா, மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்.

 என் இனிய தமிழ் மக்களே என்று தன்னை அறிமுகப்படுத்தும் வார்த்தை அவர் மறைந்தாலும் இன்றும் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

 பாரதிராஜா. அவர் இயக்கிய முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளாக கருதப்படுகின்றன.

இயக்குநராக மட்டுமல்லாமல், சமீப ஆண்டுகளில் நடிகராகவும் பல படங்களில் நடித்துவந்தார். குறிப்பாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு தாத்தாவாக நடித்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

 ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல்

தமிழ் திரையுலகில் "இயக்குநர் இமயம்" என்று போற்றப்படும் பாராதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.