ஆட்டத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை புதிய அமைப்பு தொடங்கினார்.
தன்னார்வர்களாக சேர அழைப்பு
புதிய கட்சி தொடங்குவது குறித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இணையம் வாயிலாக தெரிவித்துள்ளதாவது,
தற்போது புதிய கட்சி என்பதை விட தன்னார்வல அமைப்பு ஒன்றே உருவாக்க உள்ளோம் அந்த அமைப்புக்கு தன்னார்வலர்கள் சேரலாம். அவர்களுக்கு அரசியல், மக்கள் சேவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். பின்னர் மக்களின் தேவைக்கு ஏற்ப கட்சியாக மாற்றப்படும்.
ஒரே நபர் மீண்டும் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது"
எம்எல்ஏ, எம்பி பதவி ஒருவருக்கு எத்தனை முறை என தீர்மானிக்க வேண்டும்"
அப்துல்கலாம் பெயரில் கோவையில் அரசியல் மரபு நிறுவனம் உருவாக்க உள்ளோம்"
ஆளும் கட்சி, எதிர்கட்சி என இருந்தாலும் நாம் யாருக்கும் போட்டியில்லை"
நம் கட்சியில் நிரந்தர தலைவர், நிரந்தர எம்பி, எம்எல்ஏ இல்லை"
காலத்திற்கு ஏற்ப கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்"
என்னோடு வருபவர்கள் பொறுமை, நிதானத்தோடு வர வேண்டும்"
உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களை தயார் செய்ய உள்ளேன். உள்ளாட்சி தேர்தலுக்கு கோவையில் அப்துல் கலாம் நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
சமூக வலைதளங்களில் நாம் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
மோடி நம்முடைய பிரதமர் என்பதில் மாற்றம் இல்லை.
யாரையும் எதிர்ப்பது நம்முடைய அரசியல் இல்லை. அமைப்பை உருவாக்கி கட்சியாக மாறுவோம்.
நமது தரம் பார்த்து மக்கள் நம்மை தேர்வு செய்யட்டும்.
வெற்று எதிர்ப்பு அரசியல் என்னுடைய நோக்கம் இல்லை.
தமிழ் மக்களின் உணர்வுகளுக்காக மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு.
தமிழ்நாட்டில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடுவோம்.
இப்போது இருந்தே நமது இயக்கத்தில் உறுப்பினர்கள் சேரலாம்.
நமது இயக்கம் இப்போது யாருக்கும் போட்டி இல்லை.
ஒரு குடும்பத்திற்கே அரசியல் என்ற கொள்கையே உடைப்பேன்.
இவ்வாறு அண்ணா மலை தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். இதை அடுத்து
"இது நம்ம இயக்கம்"
என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
அமைப்பில் சேர விரும்புபவர்கள் www.wetheleader.org அமைப்பில் தன்னார்வலர்களாக இணையலாம்" என்றார்.