News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆன்மிகம்

அமைச்சர் உத்தரவிட்டும் பஞ்சாமிர்தம் விற்காத திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம்

அமைச்சர் உத்தரவிட்டும் பஞ்சாமிர்தம் விற்காத திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம்
0 கருத்துக்கள்



திருப்பரங்குன்றம் கோயிலில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யாமல் பக்தர்களை ஏமாற்றும் திருக்கோயில் நிர்வாகம் அமைச்சரின் உத்தரவின் பேரில் உடனடியாக விற்பனை செய்ய இந்துமக்கள்கட்சி கோரிக்கை 

G

 இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கக்கூடிய திருக்கோயில்களில் பிரசாதத்திற்காக விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அளித்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்து திருக்கோயில்கள் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுமென்று கடந்த ஜுன் மாதத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுருந்தார்.

ஆனால் அந்த உத்தரவு காற்றில் பறக்கவிடும் வகையில்

தமிழ்கடவுள் முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் புளியோதரை,பொங்கல்,முறுக்கு போன்ற பிரசாதங்களை தான் திருக்கோயில் நிர்வாகம் தயாரித்து பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்களே தவிர முருகப்பெருமானுக்கு உகந்த பிரசாதமான பஞ்சாமிர்தத்தை மட்டும் தயாரிக்கவில்லை.

அழகர் கோயிலில் தயாரிக்கும் பஞ்சாமிர்தத்தை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்து வருகிறது கோயில் நிர்வாகம்,.அதுவும் கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

 அமைச்சரின் உத்தரவை மதிக்காமல் செயல்படும் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.


பஞ்சாமிர்தம் தினந்தோறும் கிடைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருக்கோயில் நிர்வாகத்தையும், இந்துசய அறநிலையத்துறையையும் இந்துமக்கள்கட்சி வலியுறுத்திகிறது.

News Today Tamil Editor
எழுத்தாளர் / Author

Kathiravan

newstodaytamill@gmail.com

உண்மையான மற்றும் உடனுக்குடனான செய்திகளை வாசகர்களுக்குத் துல்லியமாக வழங்குவதில் அனுபவம் மிக்க செய்தி ஆசிரியர்.

Published: 09 Aug 2026, 12:00 AM Updated: 09 Aug 2026, 12:00 AM

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.