News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

போகிப் பண்டிகை எதிரொலி: சென்னையில் விமானங்கள் ரத்து

போகிப் பண்டிகை எதிரொலி: சென்னையில்  விமானங்கள் ரத்து
NEWS TODAY TAMIL
Updated on: 14 Jan 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

சென்னையில் போகிப் பண்டிகையை முன்னிட்டு 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 7 விமானங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும்  போகிப் பண்டிகை (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தேவையில்லாத பொருட்களை தெருக்களில் போட்டு எரிப்பது வாடிக்கையாக உள்ளது. போகிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் காற்றின் தரம் மோசமாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல்பஜார், பொழிச்சலூர், பம்மல், அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் உள்ளிட்ட பழைய பொருட்களை தெருக்களில் போட்டு எரித்ததால் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.அத்துடன் பனி மூட்டமும் சேர்வதால் விமான நிலைய ஓடுபாதையே தெரியாத அளவுக்கு மாறிவிடுவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சென்னையில் இருந்து இன்று காலை 7.15 மணிக்கு மும்பை செல்லும் விமானம், காலை 8 மணிக்கு டெல்லி செல்லும் விமானம், அதிகாலை 3.05 மணிக்கு புனே செல்லும் விமானம், காலை 6.35 மணிக்கு கோவை செல்லும் விமானம் என 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு்ள்ளன. இதேபோல் சென்னைக்கு அதிகாலை 5.20 மணிக்கு வர வேண்டிய டெல்லி விமானம், காலை 6.35 மணிக்கு வரவேண்டிய மும்பை விமானம், காலை 7.10 மணிக்கு வரவேண்டிய புனே விமானம், காலை 9.10 மணிக்கு வரவேண்டிய கோவை விமானம் என 4 வருகை விமானங்களும் என 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. 

அதேபோல் சென்னையில் இருந்து காலை 5.40 மணிக்கு விஜயவாடா செல்ல வேண்டிய விமானம் 3 மணி நேரம் தாமதமாக காலை 8.40 மணிக்கும், காலை 6 மணிக்கு தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம் 3 மணிநேரம் தாமதமாக காலை 9.05 மணிக்கும், அதிகாலை 3 மணிக்கு அபுதாபி செல்ல வேண்டிய ஏர் அரேபியா விமானம், அதிகாலை 3.50 மணிக்கும், பக்ரைன் செல்ல வேண்டிய கல்ப் விமானம் காலை 4.50 மணிக்கும், காலை 9.35 மணிக்கு மலேசியா செல்ல வேண்டிய ஏர் ஏசியா விமானம் காலை 10.15 மணிக்கும்,  அதிகாலை 2.10 மணிக்கு அபுதாபி செல்ல வேண்டிய எத்தியாட் விமானம் அதிகாலை 3.15 மணிக்கும், காலை 9.30 மணிக்கு அபுதாபி செல்ல வேண்டிய எத்தியாட் விமானம் காலை 10.25 மணிக்கும் புறப்பட்டு செல்லும் வகையில் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுயுள்ளது. 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.