நைஜீரியாவில் கப்பலில் 31.5 கிலோ கோகைன் போதைப்பொருள் கடத்தியதாக இந்தியாவை சேர்ந்த மாலுமிகள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் நைஜீரியா முன்னணியில் உள்ளது. ஐரோப்பியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு நைஜீரியாவில் இருந்து பல்வேறு போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. இவற்றைத் தடுக்க நைஜீரியா அரசு நடடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், மார்ஷல் தீவுகளில் இருந்து எம்வி அருணா ஹூலியா என்ற இந்தியக் கப்பல் லாகோஸ் துறைமுகத்திற்கு ஜனவரி 2-ம் தேதி வந்தது. அக்கப்பலில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுகள் சோதனை நடத்தினர். அப்போது கப்பலில் 31.5 கிலோ கோகைகன் போதைப்பொருள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தக் கப்பலில் இருந்த இந்தியாவை சேர்ந்த மாலுமிகள் 22 பேரை நைஜீரியா அரசு கைது செய்துள்ளது.