News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தியா

27 நாட்களில் 807 பேரை காணவில்லை- தலைநகரா, தலைமறைவு நகரா?

 27 நாட்களில் 807 பேரை காணவில்லை- தலைநகரா, தலைமறைவு நகரா?
NEWS TODAY TAMIL
Updated on: 05 Feb 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

டெல்லியில் கடந்த 27 நாட்களில் 807 பேர் காணாமல் போய் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் முதல் 27-ம்  தேதி வரை 807 பேர் மாயமாகியுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போனவர்களைத் தேடி வந்தனர். இதில் 235 பேரை கண்டுபிடித்துள்ளனர். 572 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணையின் அடிப்படையில்  ஒவ்வொரு நாளும் சுமார் 27 பேர் காணாமல் போய் உள்ளனர். அப்படி காணாமல் போனவர்களில் தினமும் 9 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 நாட்களில் 191 குழந்தைகள் மாயமாகி உள்ளனர். அவர்களில் 48 குழந்தைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். 137 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதில் 120 பேர் சிறுமிகள் ஆவர். 616  பெரியவர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களில் 90 ஆண்கள் மற்றும் 91 பெண்கள் என 181 பேரை போலீஸார் மீட்டுள்ளனர்.  இன்னும் 435 பேர்  கண்டு பிடிக்கப்படவில்லை.

டெல்லியில் கடந்த  11 ஆண்டுகளில்  5,559 குழந்தைகள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 695 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை டெல்லியில் 18 வயதுக்குட்பட்ட மொத்தம் 60 ஆயிரத்து 694 பேர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 53,763 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,931 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. இதில்  12 வயது முதல் 18 வயது வரையிலான பெண்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.