News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

காவலர் கையை கடித்து குதறிய தவெக தொண்டர் கைது

காவலர் கையை கடித்து குதறிய தவெக தொண்டர் கைது
0 கருத்துக்கள்

தருமபுரியில் போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் கையை கடித்து குதறிய தவெக தொண்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் பள்ளி அருகே செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரை அகற்றக்கோரி தவெக சார்பில் நேற்று (டிச.7) போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது தனியார் மதுபான  பாரின் கேட்டிற்குள் குதித்து தவெகவினர் செல்ல முயன்றனர். அங்கு போலீஸார், தவெகவினரை தடுத்தனர். அப்போது ஒரு காவலரை தவெக தொண்டர் கையில் கடித்து வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த நிலையில், போலீஸ்காரர் கையை கடித்த தவெக தொண்டர் ஜெமினி கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் காவலர்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட 5 தவெகவினர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!