மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதிமுக என்ற கட்சியைத் தோற்றுவித்த தலைவரான அவரின் 38வது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினரால் கடைபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் சிலைகள், படங்களை மாலை அணிவித்தும், மலர் தூவியும் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் கருப்பு நிற உடை அணிந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.