அமைச்சர் ஆய்வுக்குப் பின் ஆவணம் திருட்டு
சென்னை மின்சார வாரிய அலுவலகத்தில் அவலம்
அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் திருடு போனது தெரியவந்துள்ளது.
டெண்டர்கள், கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டுள்ளது.
அதிக அளவில் நிலக்கரி கொள்முதல் பற்றிய விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்டுள்ளது. ஆனால் டெண்டர் தொடர்பான
அச்சிடப்பட்ட நகல்கள் மின்சார வாரியத்தின் வசம் இருப்பதாக கூறப்படுகிறது.
மின்வாரிய அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வுக்கு பின் திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது.