News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
ஆன்மிகம்

ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் 92 ஆவது ஜெயந்தி விழா

ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் 92 ஆவது ஜெயந்தி விழா
0 கருத்துக்கள்



 

காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதி, ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஜெயந்தி விழா மதுரையில் நடந்தது.

கூடல் நகர் ஆனையூர் ரோடு வ.உ.சி., தெருவில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவா கிரு ஹத்தில் சிறப்பு புஷ்பாஞ்சலி நடத்தப்பட்டது. சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான குழுவினர் ருத்ர பாராயணம் செய்தனர்.


அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு தலைமை வகித்து பேசியதாவது;

பாரம்பரிய ஆன்மிகத்திற்கும் சமூக நலனுக்கும் இடைவெளியைக் குறைத்ததில், புது பெரியவா என பக்தர்களால் அழைக்கப்பட்ட ஜெயந்திரரின் பங்கு அதிகம். பல ஆண்டுகளாக வேதங்கள், சாஸ்திரங்கள், இந்தியப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதிலும், தர்மத்தைப் பாதுகாக்கவும் தன்னை அர்ப்பணித்தவர். 

பள்ளிகள், எளிதில் அணுகக்கூடிய மருத்துவமனைகள், கண் பராமரிப்பு முகாம்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிறுவி, மடத்தின் செயல்பாடுகளை மக்கள் நலத்திட்டங்களாக விரிவுபடுத்தினார். 

ராம ஜன்ம பூமி இயக்கத்தின் ஆரம்ப கட்டங்களில் முக்கிய நபராக இருந்து, தேசிய கலாச்சார மேம்பாடுகளில் முக்கிய பங்கு வகித்தார்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

New Today Tamil Editorial Team
Published By

New Today Tamil Editorial Team

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.