News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

உதயநிதி – ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் காரசார விவாதம்.

 உதயநிதி – ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் காரசார விவாதம்.
0 கருத்துக்கள்


சட்டப்பேரவையில் உதயநிதி – ஆதவ் அர்ஜுனா காரசார விவாதம்.


தமிழக சட்டப்பேரவையில் லாட்டரி நிறுவனத்துடன் தொடர்புடைய விவகாரம் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதில் ஆதவ் அர்ஜுனா மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடையே கேள்வி–பதில் வடிவில் கருத்துகள் பரிமாறப்பட்டன.

விவாதத்தைத் தொடங்கிய ஆதவ் அர்ஜுனா, "லாட்டரி நிறுவனத்திடம் இருந்து திமுக ரூ.900 கோடி நன்கொடையாக வாங்கியது ஏன்? இதற்கான காரணங்களை உதயநிதி தெரிவிக்க வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "லாட்டரி நிறுவனத்திடம் இருந்து திமுக நன்கொடை பெற்றதாக கூறப்படுவது எந்த அடிப்படையில்? அதற்கான ஆதாரங்களையும், உண்மைத் தகவல்களையும் முன்வைக்க வேண்டும். நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. லாட்டரி நிறுவனத்தின் முதலாளி ஒருவர் இருப்பார். அவரிடம் போய் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் பேசிய ஆதவ் அர்ஜுனா, "அது உங்கள் அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும். அவரிடம்தான் கேட்க வேண்டும். வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் கேளுங்கள்; அவர் வாங்கியது ஏன் என்று சொல்லுவார்" என பதிலடி கொடுத்தார்.

இந்த விவாதம் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதத்திற்கும் வழிவகுத்தது. அரசியல் வட்டாரங்களிலும் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!