News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
இந்தியா

அரசு பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்ப்போம்: தெலங்கானா கிராமத்தில் தீர்மானம்

அரசு பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்ப்போம்: தெலங்கானா கிராமத்தில் தீர்மானம்
0 கருத்துக்கள்




ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தினர் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் லட்சுமண் சந்தா எனும் கிராமம் உள்ளது. இக்கிராம மக்கள் சமீபத்தில் ஒன்று கூடி, தங்களின் பிள்ளைகளின் வருங்காலம் குறித்தும், கல்வி குறித்தும் ஆலோசனை நடத்தினர். இந்த கிராம பஞ்சாயத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயிகள் ஆவர். இவர்கள் நடத்திய ஆலோசனையின் இறுதியில் அனைவரது பிள்ளைகளையும் அரசு பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் எனவும், தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க கூடாது எனவும் ஒருமனதாக தீர்மானித்தனர்.

அரசு பள்ளிகளில் தான் நன்கு படித்த ஆசிரியர்கள், பிள்ளைகள் விளையாட மைதானம், அறிவியல் சோதனைக் கூடம் என பல்வேறு வசதிகள் உள்ளன. எனவே தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்ததாக அப்பகுதியின் ஊராட்சி மன்ற தலைவி படிகலா லட்சுமி தெரிவித்துள்ளார்

.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!