பதவியேற்றவுடன் சரி செய்யப்பட்ட பொதுமக்கள் புகார்
மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன் அதிரடி
மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பனங்காடி கிராமத்தில் 4 வார்டு கழிவுநீர் சாக்கடைகள் தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதை அதிகாரிகள் சுத்தம் செய்யாததால்
ஒரு சிறுமி களத்தில் இறங்கி சுத்தம் செய்ய முயற்சித்தார். குழந்தைகள் சுத்தம் செய்யும் காட்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பார்வைக்கு உடனே நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கொண்டு சென்றனர். அவர் பதவியேற்ற சில நிமிடங்களில் இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக மதுரை மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு சுத்தம் செய்ய கேட்டுக் கொண்டார். உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று சாக்கடைகளை சுத்தம் செய்தனர். கிழக்கு தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயனின் நடவடிக்கை கிராம மக்கள் பெரிது பாராட்டினார்.