News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
உலகம்

ஸ்பெயினில் ரயிலோடு ரயில் மோதி பயங்கர விபத்து: 21 பேர் பலி

 ஸ்பெயினில் ரயிலோடு ரயில் மோதி பயங்கர விபத்து: 21 பேர் பலி
0 கருத்துக்கள்

ஸ்பெயினில்  தடம் புரண்ட ரயில் மீது அதிவேகமாக வந்த  மற்றொரு ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டின் கோர்டோபா மாகாணத்தில் அதிவேகமாக வந்த  இர்யோ ரயில் எதிர்பாராத விதமாக தடம்புரண்டது. இந்த ரயில் மலாகாவில் இருந்து மேட்ரிட் - புவர்டா டி அடோசா நோக்கி சென்றது. அடாமுஸ் அருகே வந்த போது அந்த ரயில் தடம் புரண்டது. அப்போது மேட்ரிட்- ஹுல்வா வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த  ரயில் அதிவேகத்தில் வந்து மோதியது. இதனால் பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டவர்கள், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பினர்.

ஆனாலும், இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.அவர்களில் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அரசு செய்தி நிறுவனமான எஸ்பானோலா தெரிவித்துள்ளது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!