News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

பயங்கரம்... சென்னை மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொலை

பயங்கரம்... சென்னை மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொலை
0 கருத்துக்கள்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள், ஹெல்மெட் அணிந்த  மர்ம நபர்களால்,  ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராஜமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆதி. பிரபல ரவுடியான இவரது மனைவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஆதி இன்று (ஜனவரி 12) காலை மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து  வந்த ஹெல்மெட் அணிந்த மூன்று பேர், மருத்துவமனைக்குள் வைத்து ரவுடி ஆதியை பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில், தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில்  சம்பவ இடத்திலேயே ஆதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து ரவுடி ஆதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆதியை கொலை செய்தது அவரது தோழி சுசித்ராவின் கூட்டாளிகள் என்பது போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து தலைமறைவான  சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!