News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

புயலால் ரயில்கள் நிறுத்தம்- ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

புயலால் ரயில்கள் நிறுத்தம்- ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
0 கருத்துக்கள்

‘டிட்வா’ புயலால் ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் அனைத்து ரயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தை தொடர்ந்து, ராமேஸ்வரம் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே பலத்த காற்று வீசி வருவதுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், ‘டிட்வா’ புயல் வடதமிழகம் நோக்கி நகருகிறது. 9 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக அனைத்து ரயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 28) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது சூறைக்காற்று வீசுவதால். ஐந்தாவது நாளாக இன்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.  

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!