21 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் விற்க தடை
முதல்வர் விஜயின் அடுத்த அதிரடி
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார்.
இதை அடுத்து 21 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கக் கூடாது மீறினால் துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுபானம் வாங்க வருபவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்ற அடையாள அட்டைகளை கேட்டு சரியாக இருந்தால் விற்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.