நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரத்தை தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது.
நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை இன்று முதல் மக்கள் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்தது. இதனையொட்டி கல்லூரி மாணவர்கள், உள்ளூர் மக்கள் என ஏராளமானோர் அருங்காட்சியகத்தை காலையில் இருந்து ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொருநை அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிடலாம்.
பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட சிறியவர்களுக்கு ரூ.10, மாணவர்களுக்கு ரூ.5 கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 20 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு ரூ.50 நுழைவுச்சீட்டு கட்டணமாக வசூலிக்கப்படும். செவ்வாய் கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் பொருநை அருங்காட்சியத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் 5D, 7D தியேட்டருக்கு ரூ.25 தனி கட்டணம். பொருநை அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட வசதியாக நெல்லை ரயில் நிலையம், நெல்லை பஸ்டாண்ட் பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.