பாஜக மாநில செயலாளர் ராஜினாமா..
அண்ணாமலைக்கு ஆதரவாக
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். அவரது ராஜினாமா கடிதம் தேசிய தலைமையால் ஏற்கப்பட்டுள்ளது.
நிலையில் அவர் புதிய அரசியல் அமைப்பை ஒன்றை உருவாக்கியுள்ளார். அதை உருவாக்கிய மூன்று மணி நேரத்தில் 4 லட்சம் பேர் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அண்ணாமலையோடு சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக வெளிப்படையாக கூறி பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் விஷ்ணு பிரசாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தை மாநில தலைவருக்கு அனுப்பியுள்ளார். அவரைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து பலரும் ராஜினாமா செய்து அண்ணாமலையின் அமைப்பில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் நிர்வாகிகள் யாரும் அண்ணாமலை பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக நேரடியாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.