லஞ்சமாக கட்சிநிதி பல நூறு கோடி வாங்கியவர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
அமலாக்கத் துறை அறிக்கையில் கூறியுள்ளது என முதல்வர் விஜய் ஆவேசம்
சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்வர் விஜய் நேற்று ஆவேசமாக பேசுகையில்,
"என் டேபிளில் உள்ள 3 பைல்களை ஓபன் பண்ணுவதற்கு முன் இன்று ஒரு சாம்பிள் பற்றி பேசுகிறேன். திமுக அரசுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய டாக்குமென்ட் என்னிடம் உள்ளது.
கடந்த ஆட்சியில் பார்ட்டி ஃபண்ட்( கட்சிநிதி) வாங்கியதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
7.5% முதல் 10% வரை பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.
பார்ட்டி ஃபண்ட் வாங்கியதில் முக்கிய நபர்கள் ஸ்டாலின், உதயநிதி என அமலாக்கத் துறை கூறியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என அமலாக்கத் துறை கூறியது.
சர்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படித்தால் திமுகவின் ஊழல்கள் தெரியும்.
கரூர் கேங்க் என்ற பெயரில் டாஸ்மாக்கில் வசூலில் ஈடுபட்டுள்ளனர். முறைகேட்டையே முறையாக திமுகவினர் செய்துள்ளனர்.
தனது அதிகாரத்தை செந்தில் பாலாஜி தவறாக பயன்படுத்தியுள்ளார்; விஞ்ஞான ஊழல் என்பதும் இதில்தான் வரும். திமுக எதை செய்தாலும் குடும்பமாக சேர்ந்துதான் செய்வார்கள் போல.
கலைஞர் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, அவர் பெயர பயன்படுத்துவதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் அமலாக்கத்துறை அறிக்கையைத் தான் பேசுகிறேன்.
முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளதாக ஆதாரத்தை காட்டி ஆவேசமாக முதலமைச்சர் விஜய் பேசினார்.