News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

நடுக்கடலில் நாகை மீனவர்கள் 14 பேர் கைது

நடுக்கடலில் நாகை மீனவர்கள் 14 பேர் கைது
0 கருத்துக்கள்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது.

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதம்(அக்டோபர்) 9-ம் தேதி தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்த இலங்கை கடற்படை நவம்பர் 3-ம் தேதி நாகை மீனவர்கள் 31 பேர், ராமநாதபுரம் மீனவர்கள் 4 மீனவர்கள் என 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 

இந்த நிலையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்கள் இன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டியதாக அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நடப்பாண்டில் தமிழகத்தை சேர்ந்த 114 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!