News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

தென்கிழக்கு ஆசியாவை சூறையாடிய புயல்கள்- 1,140 பேர் பலி

தென்கிழக்கு ஆசியாவை சூறையாடிய புயல்கள்- 1,140 பேர் பலி
0 கருத்துக்கள்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட டிட்வா, சென்யார் புயலுக்கு இதுவரை 1,140-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

வங்கக்கடலில் உருவான டிட்வா, சென்யார் புயல்களால் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, தாய்லாந்து, இலங்கையை கபளீகரம் செய்தது. அத்துடன் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களை நோக்கி டிட்வா மையம் கொண்டுள்ளது. 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்யார் புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் இந்தோனேஷியாவில் மட்டும் 604 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். டிட்வா புயலால் இலங்கையில் 366 பேரும், சென்யார் புயலால் தாய்லாந்தில் 176 பேரும், மலேசியாவில் 3 பேரும் பலியாகியுள்ளனர்.

மேலும் நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். இலங்கையில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையை தாக்கிய மிக மோசமான இயற்கைப் பேரிடர் என, கூறப்படுகிறது. இலங்கையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!