News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

200 தொகுதிகளைத் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

200 தொகுதிகளைத் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
0 கருத்துக்கள்

சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளைத் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் பொங்கல் விழா இன்று (ஜனவரி 10) நடபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசுகையில், " தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை எழுச்சியோடு கொண்டாடும் இந்தச் சிறப்பான நேரத்தில், உங்களை எல்லாம் நான் சந்தித்து, நம் கொளத்தூர் தொகுதியில் இருக்கும் கழகத்தின் செயல்வீரர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு முன் கூட்டியே கிடைத்துள்ளது.

என்ன தான் நான் முதலமைச்சராக இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, பல்வேறு மாவட்டங்களில் நடைபெறக்கூடிய அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, கழக நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அல்லது பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நேரத்தில் என்ன மகிழ்ச்சி அடைகிறேனோ, பெருமை அடைகிறேனோ, அதைவிட கொளத்தூர் தொகுதியில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அதில் ஒரு வேகமும், ஒரு எனர்ஜியும் எனக்கு வந்துவிடுகிறது. அந்த எனர்ஜியோடுதான் உங்கள் முன் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை எல்லாம் செயல்படுத்தியிருக்கிறது என்பதை உங்களுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீங்கள் அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த பொங்கல் விழாவை எழுச்சியோடு கூட்டி உங்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே நீங்கள் தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவீதத்தை முடித்துவிட்டீர்கள். இன்னும் 50 சதவீதம் பாக்கி உள்ளது. இன்று பல்வேறு கட்சியினர், ஏன் பாஜகவில் இருக்கக்கூடியவர்கள் கூட திமுக காரன் மாதிரி யாரும் வேலை செய்ய முடியாது என்று சொல்கிறார்கள்.

நாம் இப்போது ஆற்றியிருக்கக்கூடிய பணிகளை எல்லாம் பார்க்கும்போது, 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. அந்த நம்பிக்கையோடு பொங்கல் விழாவை நாம் கொண்டாடுகிறோம். வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற உறுதியேற்போம், சபதமேற்போம்" என்றார்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!