News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

பாபர் மசூதி கட்டுவதாக அறிவித்த எம்எல்ஏ சஸ்பெண்ட்- மம்தா பானர்ஜி அறிவிப்பு

பாபர் மசூதி கட்டுவதாக அறிவித்த எம்எல்ஏ சஸ்பெண்ட்- மம்தா பானர்ஜி  அறிவிப்பு
NEWS TODAY TAMIL
Updated on: 04 Dec 2025, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

பாபர் மசூதி மீண்டும் கட்டுவேன் என்று அறிவித்த எம்எல்ஏ ஹூமாயுன் கபீரை கட்சியில் இருந்து திரிணமுல் காங்கிரஸ்  கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதியைப் போன்று, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் மசூதியை கட்டுவேன் என்று தெப்ரா தொகுதி திரிணமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹூமாயுன் கபீர் அறிவித்திருந்தார்.

இதற்கு  டிசம்பர் 6- ம் தேதி அடிக்கல் நாட்டுவேன் என்றும், மூன்று மாதங்களுக்குள் பாபர் மசூதியை கட்டி முடிப்பேன் என்றும் கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஹூமாயுன் கபீரின் அறிவிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து  திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து  ஹூமாயுன் கபீரை  சஸ்பெண்ட் செய்து மேற்கு வங்க முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின்  கொல்கத்தா மேயர்  பிர்ஹாத் ஹக்கீம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களில் ஒருவர், பாபர் மசூதி கட்டுவேன் என்று அறிவித்தார். திடீரென பாபர் மசூதியை கட்டுவது ஏன்? அவரை நாங்கள் பலமுறை எச்சரித்தோம். ஆனால், அவர் கேட்கவில்லை. தற்போது அவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்,' என்று கூறினார்.

இந்த நிலையில், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஹூமாயுன் கபீர் டிசம்பர் 22-ம் தேதி புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். அத்துடன் மேற்கு வங்கத்தில் அவரது கட்சி 135 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார். 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.