News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் பலியான சோகம்

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் பலியான சோகம்
0 கருத்துக்கள்

இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோவில் செயல்படும் முதியோர் இல்லத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 6 வாகனங்களில் சென்று தீயை போராடி அணைத்தனர். ஆனாலும், தீயில் கருகி 16 முதியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!