News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: காத்திருக்கிறது கார் பரிசு!

 உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: காத்திருக்கிறது கார் பரிசு!
0 கருத்துக்கள்

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  இன்று(ஜனவரி 17) கோலாகலமாக தொடங்கியது.

தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம்  அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும்  நடந்து முடிந்தன.

இந்த  நிலையில் இன்று  காலை 7 மணியளவில் அலங்காநல்லூரில் தொடங்கியது. இதனை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கி வைத்தனர். முதலில், அலங்காநல்லூரில் உள்ள முக்கிய கோயில்களின் காளைகள் வாடிவாசல் வழியாக முதலில் அவிழ்த்து விடப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான காளைகளும், மாடு பிடிவீரர்களும் அலங்காநல்லூருக்கு வருகை தந்துள்ளனர்.

இன்றைய போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்படுகிறது. அதே போன்று களத்தில் சிறந்து விளையாடும் மாட்டின் உரிமையாளருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக டிராக்டர் பரிசாக வழங்கப்படவுள்ளது. இரண்டாவது சிறந்த காளையின் உரிமையாளருக்கு மோட்டார் பைக்கும், மூன்றாவது சிறந்த காளையின் உரிமையாளருக்கு எலெக்ட்ரிக் பைக்கும் வழங்கப்படவுள்ளன. 12 சுற்று வரை போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் சுற்றில் கருவனூர் அகத்தியன் 3 காளைகளையும், கள்ளந்திரி கோகுல்ராஜ், அலங்காநல்லூர் அஜித, மதுரை பிரசாத், வாடிப்பட்டி சூர்யா ஆகியோர்  தலா  2 காளைகளை பிடித்துள்ளனர்.மாடு பிடி வீரர்களுக்கு தங்கக்காசு, கட்டில், பீரோ, சைக்கிள், சேர், ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!