News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
இந்தியா

பேட்டரி வாகனங்களுக்கு மக்கள் மாற வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு:

பேட்டரி வாகனங்களுக்கு மக்கள் மாற வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு:
0 கருத்துக்கள்

குப்பம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனது குப்பம் தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் தொடங்கினார். இதில் 2-ம் நாளான நேற்று ரூ.117 கோடி செலவில் அதிநவீன பஸ் நிலையம் மற்றும் பணிமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்: ராயலசீமா மாவட்டங்களில் ரூ.1 லட்சம் கோடி செலவில் தோட்டக் கலை மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் தனியார் ரூ.60 ஆயிரம் கோடியும், அரசு ரூ.40 ஆயிரம் கோடியும் முதலீடு செய்ய உள்ளன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக இனி பேட்டரி வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். ஸ்கூட்டர்கள், கார்கள், பேருந்துகள் எல்லாம் பேட்டரியில் இயங்க வேண்டும். அப்போது தான் சுற்றுச்சூழல் மேன்மை அடையும். விரைவில் ஆந்திர அரசு பேருந்துகள் சூரிய சக்தி மூலம் இயங்கும்.

பிரபல ‘அடிதாஸ்’ நிறுவனம் ஆந்திராவுக்கு வரவுள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்

.



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!