News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

கடலூர் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு : அரசு பஸ் டிரைவர் கைது

கடலூர் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு : அரசு பஸ் டிரைவர் கைது
0 கருத்துக்கள்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கார்கள் மீது அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசு விரைவு பஸ் மோதியது. இதில் கார்கள் நொறுங்கி  9  பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அஜாக்கிரதையாக பஸ்சை இயக்கியதாக அதன் டிரைவர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை போலீஸார் இன்று கைது செய்தனர். 

அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவர்  தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறை, அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பஸ்சை  இயக்குவதற்கு முன்பாக உரிய முறையில் சோதனை செய்யத் தவறியதாக காவல்துறை  வழக்குப்பதிவு செய்துள்ளது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!