ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்கம்.. குடும்பத்தினர் போராட முடிவு.
தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் ஊராட்சி செயலாளர்களை பணியிடை நீக்கம் செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதுவரை, சுமார் 500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும் போராட்டம் தொடரும் என்றும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல இருப்பதாகவும் சங்கம் அறிவித்து உள்ளது. அது மட்டுமல்லாமல் ஊராட்சி செயலாளர்களின் குடும்பத்தினர் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் போராட்டம் நடத்த உள்ளதாக செய்தி வருகிறது. சென்னையில் நடைபெறும் போராட்டம், பணியிடை நீக்க நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் பெருமளவில் போராட்டம் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.