News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் மதுவுடன் புத்தாண்டு பார்ட்டி- 5 பேர் சஸ்பெண்ட்

அரசு மருத்துவமனையில் மதுவுடன் புத்தாண்டு பார்ட்டி- 5 பேர் சஸ்பெண்ட்
NEWS TODAY TAMIL
Updated on: 03 Jan 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

அரசு மருத்துவமனையில் மது அசைவ உணவுடன் புத்தாண்டு கொண்டாடியது தொடர்பாக 4 டாக்டர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  

சிவகங்கை மாவட்டம்,  கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  இரு கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுக்கு ஒரு கட்டிடமும், புற நோயாளிகள் உள்ளிட்ட மற்ற சிகிச்சைகளுக்கான பிரிவு மற்றொரு கட்டிடமும் இயங்கி வருகிறது. கடந்த 31-ம் தேதி இரவு கல்லல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் காயமடைந்தார். அவரை  வாலிபர் ஒருவர் சிகிச்சைக்காக செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

அப்போது பிரசவ வார்டு மற்றும் அறுவை சிகிச்சை அறை உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள நோயாளிகள் படுக்கும் கட்டிலில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், மீன், நண்டு உள்ளிட்ட அசைவ உணவுகள், நொறுக்குத்தீனிகள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. சிலர் அந்த வார்டில் புத்தாண்டு தினத்தை மது, அசைவ உணவுகளுடன் கொண்டாடியதாக தெரிகிறது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர், மது உள்ளிட்டவற்றை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய 4 மருத்துவர்கள், 1 மருந்தாளர் என 5 பேர்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.