ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல் தாண்டியதாக கூறி அவ்வப்போது கைது செய்து அவர்களது படகுகளையும் சிறை பிடித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு படகையும், அதில் சென்ற மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி கைது செய்து இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு மீன்வளத் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக அந்த மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம், ராமேஸ்வரம் பகுதி மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.