தென்காசியில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் இன்று(ஜனவரி 16) கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதையறிந்த போலீஸார் மற்றும் மீட்பு பணியினர் விரைந்து வந்து வேனில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த வேன் டிரைவர் குருமூர்த்தி (33) மற்றும் சத்தியமூர்த்தி (34) ஆகியோர் உயிரிழந்தனர். வேன் விபத்தில் காயமடைந்த 6 குழந்தைகள் உள்பட 12 பேர் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.