News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

ரேஷன் கடைகள் இந்த வாரம் வெள்ளிக்கிழமையும் இயங்கும்!

ரேஷன் கடைகள் இந்த வாரம் வெள்ளிக்கிழமையும் இயங்கும்!
0 கருத்துக்கள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 9-ம் தேதி வெள்ளிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக கரும்பு, சர்க்கரை, பச்சரிசி கொள்முதல் செய்ய தமிழக அரசு ரூ.234 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான டோக்கன்கள்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நாளை (ஜனவரி 8) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  இந்த பரிசுத் தொகுப்புகளை வழங்குவதற்காக ஜனவரி 9-ம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு  வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளுக்கு பதிலாக பிப்ரவரி 7-ம் தேதி விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. எனவே இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!