IPS அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயார்.
- ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் உட்பட 3 பேர் DGP யாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு பட்டியல் தயாராகி தலைமைச் செயலாளர் முருகானந்தம் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பணியாற்றும் உதவி எஸ்பிக்கள் முதல் கூடுதல் டிஜிபி வரை உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 40 பேர் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மற்றும் கூடுதல் டிஜிபிக்கள் சந்திப் மீட்டல், பாலநாக தேவி ஆகியோர் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 7 ஐஜிக்கள் கூடுதல் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
அதேபோல் 3 டிஐஜிக்கள் ஐஜியாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
சென்னை ஆவடி 5வது பட்டாலியன் கமாண்டராக உள்ள எஸ்பி மணிவண்ணன் ஐபிஎஸ் உட்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜி-களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
அதேபோல் புதிதாக ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியில் நியமிக்கப்பட்டுள்ள 13 ஏஎஸ்பிக்கள் எஸ்பிக்களாக பதிவு உயர்வு பெறுகின்றனர்.
இந்தப் பதவி உயர்வு பட்டியல் வரும் வாரத்தில் என்று தெரிகிறது. இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி மாறுதல்களும் பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.