News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
இந்தியா

டெல்லியில் இன்று பொங்கல் விழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

 டெல்லியில் இன்று பொங்கல் விழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்!
0 கருத்துக்கள்

டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறையின் இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் இன்று நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறையின் இணை அமைச்சர் எல். முருகன் ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டிற்கான பொங்கல் விழா இன்று (ஜனவரி 14) நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். 

இவ்விழாவில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரதிநிதிகள், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும்ம் பங்கேற்கின்றனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக நீதிபதிகள், பல உயர் அதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. உச்சநீதிமன்ற  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், குஷ்பு, சரத்குமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடன அமைப்பாளர் கலா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!