News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

பள்ளத்தாக்கில் மினி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி

பள்ளத்தாக்கில் மினி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி
0 கருத்துக்கள்

உத்தாரகண்டில் மினி பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

உத்தாரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் ராம்நகரை நோக்கி 18 பயணிகளுடன் மினி பஸ் இன்று காலை சென்று கொண்டிருந்தது. பிக்கியாசன் பகுதியில் உள்ள ஷிலாபானி  என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த எஸ்டிஆர்எஃப் மற்றும் போலீஸார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பள்ளத்தாக்கில் இருந்து பஸ்சை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பஸ்சுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணி அதனால் தாமதமானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தாரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!