மதுரையில் உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் மைதானம்
கார்த்திகேயன் எம் எல் ஏ கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதில்
மதுரையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கான கேள்வி நேரத்தின்போது மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன் தனது தொகுதியில் முழு தகவுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்று பேசினார்.
அதற்கு பதில் அளித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகையில், ' மதுரையில் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த ஒலிம்பிக் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான இடம் மதுரையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தகுதியான இடம் இருந்தால் எம்எல்ஏ கார்த்திகேயன் கலெக்டரிடம் மனுவாக கொடுக்கவும். நிச்சயம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.