News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தியா

சிபிஎஸ்இ 7, 8, 9-ம் வகுப்புக்கான மும்மொழித் திட்ட விதிகளில் தளர்வு:

சிபிஎஸ்இ 7, 8, 9-ம் வகுப்புக்கான மும்மொழித் திட்ட விதிகளில் தளர்வு:
0 கருத்துக்கள்

புதுடெல்லி: தற்போது 7, 8, 9 -ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், 10-ம் வகுப்பை அடையும்போது மூன்றாவது மொழிக்கு தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு: தற்போது 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் புதிய மும்மொழித் திட்டத்தை பின்பற்ற வேண்டிய தில்லை. மேலும், தற்போது 7, 8, 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 10-ம் வகுப்பை அடையும்போது மூன்றாவது மொழிக்குத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. ஏற்கெனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்கள் அதே மொழிகளைத் தொடரலாம்.

அதே நேரத்தில் அவர்கள் கூடுதலாக ஓர் இந்திய மொழியைக் கற்க அனுமதிக்கப்படுவார்கள்.வகுப்புக்கு ஏற்ற பாட புத்தகங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். அவற்றில் குறைந்தது இரண்டு இந்திய மொழிகள் இருக்க வேண்டும். ஏற்கெனவே, இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் மாணவர்கள் மூன்றாவது மொழியாக ஓர் இந்திய மொழியைச் சேர்த்துக்கொள்ளலாம்.

கூடுதல் மொழிக்கு பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டு நடைமுறை மட்டுமே பின்பற்றப் படும். இவர்கள் 10-ம் வகுப்புக்குச் செல்லும்போதுமூன்றாவதுமொழிக்கு தேர்வு இருக்காது. இதேபோல், தற்போது 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும் இதே இடைக்கால தளர்வு நீட்டிக்கப் பட்டுள்ள

து.


News Today Tamil Editor
எழுத்தாளர் / Author

Kathiravan

newstodaytamill@gmail.com

உண்மையான மற்றும் உடனுக்குடனான செய்திகளை வாசகர்களுக்குத் துல்லியமாக வழங்குவதில் அனுபவம் மிக்க செய்தி ஆசிரியர்.

Published: 29 Jun 2026, 12:00 AM Updated: 29 Jun 2026, 12:00 AM

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.