தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சில மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, தமாகா, பாமக(அன்புமணி) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. கூட்டணி முடிவான நிலையில், பிரசார பணிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கு பாஜகவின் பொறுப்பாளராக அண்ணாமலையை கட்சி தலைமை நியமித்திருந்தது.
இந்த நிலையில், தது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று (பிப்ரவரி 3) கூறுகையில், ”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக்கொண்ட 16-வது நிதிக்குழுவின் பரிந்துரை தமிழகம் பலன் அடைந்துள்ளது. குறிப்பாக வரி பகிர்வில் நாட்டின் வளர்ச்சிக்கு 10 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது, இது எதிர்கட்சிகளின் வாயை அடைத்துள்ளது.
திமுக அமைச்சர்களை அழைத்து அண்ணாவை பற்றி 10 வரிகள் எழுதச் சொன்னால் யாருக்கும் எழுதத் தெரியாது. இன்றைக்குகூட தேர்வு வைத்து பாருங்கள், யாருக்கும் தெரியாது. அண்ணா, அண்ணா என்று அவர் பிறந்தநாள், நினைவுநாளில் பேசுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திக்கப் போகிறோம். அவர்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர். திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்த கூட்டணி போன்றது. விஜய் கட்சிக்கு இஞ்சினே இல்லை. விஜய் கட்சியின் இஞ்சினை ஓட்ட யார் இருக்கிறார்? மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய்யின் பேச்சு இல்லை. விசில் மற்றும் கைதட்டலுக்காகவே விஜய்யின் பேச்சுகள் இருக்கின்றன” என்றார்.