News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

காங்கிரஸ் தலைவரைத தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க கோரிக்கை.

காங்கிரஸ் தலைவரைத தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க கோரிக்கை.
0 கருத்துக்கள்

தமிழக காங்கிரஸ் தலைவரைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க கோரிக்கை.

முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தேசியத் தலைவருக்கு கடிதம்.


தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) தலைவரை நியமன முறையில் அறிவிக்காமல், ஜனநாயக ரீதியான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதுள்ள நியமன முறையால் கட்சிக்குள் கோஷ்டி பூசல்கள் உருவாவதோடு, தலைவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கும் நிலை உள்ளது. இதனால் கட்சி பலவீனம் அடைகிறது.

மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் வாக்களித்து தலைவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய தலைமை உருவாகும்.

 மாவட்ட அலுவலகங்கள் மூலம் முறைப்படி தேர்தல் நடத்தினால், அது அடிமட்டத் தொண்டர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.

 ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், முன்னாள் மற்றும் இந்நாள் மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட இது ஏதுவாக இருக்கும்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தல் போலவே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் தேர்தலை நடத்த வேண்டும். இதன் மூலமே தமிழகத்தில் காங்கிரஸைப் பலப்படுத்த முடியும் என முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு வலியுறுத்தியுள்ளார்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!