News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

6 லட்சம் பேருக்கு அன்னமிட்ட மதுரையின் அட்சயப் பாத்திரம்!

 6 லட்சம் பேருக்கு அன்னமிட்ட மதுரையின் அட்சயப் பாத்திரம்!
0 கருத்துக்கள்

மதுரையில் ஆதரவற்றோருக்கு ஐந்து வருடமாக தொடர்ந்து மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் அன்னமிட்டு வருகிறது. இதன் நிறுவனர் நெல்லை பாலு  6 லட்சம் பேருக்கு அன்னமிட்டுள்ளார்.

தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று மகாகவி பாரதியும்,  வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று' வள்ளலாரும் கூறினர். உலகில் கொடுமையான நோய் ஒன்று உண்டென்றால் அது பசி மட்டும்தான். எனவே தான், பசிப்பிணி என்கிறோம். இந்த நிலையில் ஆதரவற்றோர், சாலையில் அனாதைகளாக இருப்போருக்கு, கடந்த 5 வருடமாக  தினமும் மதிய உணவினை வழங்கி வரும் மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சார்பில் நேற்று (ஜனவரி 18)  6-வது வருடம் துவக்கமாக  முக்தீஸ்வரர் கோயில் முன்பு உணவு வழங்கப்பட்டது.

தை அமாவாசை என்பதால் முக்தீஸ்வரர் கோயிலில் தர்ப்பணம் கொடுப்பதற்கு  திரளாக மக்கள் வந்திருந்தனர்‌. அவர்களுக்கு அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் சார்பில் உணவு வழங்கப்பட்டது‌ பித்ரு கடனை அடைக்க சாஸ்திரம் சுட்டிக் காட்டும் வழி அன்னதானம். பித்ரு சாபங்கள் இருந்தால், பிள்ளைகள் விருத்தி இல்லாமல் இருப்பது போன்ற பல தீமைகள் வீட்டில் அரங்கேறும் என்பர். 

இவற்றையெல்லாம் போக்கி முன்னோர் ஆசிர்வாதம் பெற்று, நம் சந்ததியினர் மகிழ்வோடும் ஆரோக்கியத்தோடும் வாழ ஒரே வழி 'அன்னதானம்!' மட்டுமே என்பதால் மதுரை அட்சயப் பாத்திரம் டிரஸ்ட்  சார்பில் நெல்லை பாலு தொடர்ச்சியாக ஐந்து வருடங்களாக உணவு வழங்கி வருகிறார் " இன்றுடன் 5வருடம் நிறைவு பெற்று 6வருடம் துவங்குகிறது. இதுவரை 6 லட்சம் பேருக்கு வயிற்று பசியாற்றியுள்ளோம். உயிர் உள்ளவரை இப்பணி தொடரும்" என்று அட்சயப் பாத்திரம் டிரஸ்ட்  நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்தார்.  

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!