News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

பலத்த பாதுகாப்புடன் ராணுவ விமானத்தில் மதுரை வந்த நீட் மறு தேர்வு வினாத்தாள்!

பலத்த பாதுகாப்புடன் ராணுவ விமானத்தில் மதுரை வந்த நீட் மறு தேர்வு வினாத்தாள்!
0 கருத்துக்கள்



மதுரை: நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து முறைகேடு நடைபெற்ற நிலையில் வருகிற 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான வினாத்தாள்கள், தென் மாவட்டங்களில் நடைபெறும் தேர்வு மையங்களுக்கு அனுப்பும் பணியின் ஒரு பகுதியாக, டெல்லியில் இருந்து தனி ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தேவை யான வினாத்தாள்கள் அஞ்சல் துறை வாகனம் மூலமாக பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

தேசிய தேர்வு முகமை, தபால்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், அஞ்சல் துறையுடன் இணைந்து வினாத்தாள்கள் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்து வருகின்றனர்.






Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!