News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
இந்தியா

திருப்பதியில் பக்தர்கள் குவிந்தனர்- 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்:

திருப்பதியில் பக்தர்கள் குவிந்தனர்- 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்:
0 கருத்துக்கள்

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று காலையில் தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்தது.

இதனால் திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது. அதிக அளவில் பக்தர்கள் வாகனங்களில் வந்ததால் மலை அடிவாரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. அந்த அறைகளை தாண்டி பக்தர்கள் சீலா தோரணம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்தனர்.

திருப்பதி கோவிலில் நேற்று 72,703 பேர் சாமி தரிசனம் செய்தனர். 37,581 பக்தர்கள் முடிககாணிக்கை செலுத்தினர். ரூ.4.02கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. 4.34 லட்சம் லட்டுகள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.






Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!