பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 9-ம் தேதி வெள்ளிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக கரும்பு, சர்க்கரை, பச்சரிசி கொள்முதல் செய்ய தமிழக அரசு ரூ.234 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நாளை (ஜனவரி 8) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த பரிசுத் தொகுப்புகளை வழங்குவதற்காக ஜனவரி 9-ம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளுக்கு பதிலாக பிப்ரவரி 7-ம் தேதி விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. எனவே இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.