News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

பெற்றோரை காக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை :நீதியரசர் வடமலை வேதனை

பெற்றோரை காக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை :நீதியரசர் வடமலை வேதனை
NEWS TODAY TAMIL
Updated on: 14 Jan 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

வயதான பெற்றோரை ரோட்டில் தள்ளுவதும், முதியோர் இல்லத்தில் சேர்ப்பதுமான நிலை அதிகரித்து வருவது வேதனை தருகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதியரசர் வடமலை வேதனை தெரிவித்துள்ளார்.

மதுரை விளாச்சேரி ஐஸ்வர்யம் முதியோர் காப்பகம் மற்றும் புன்னகை பூக்கள் சிறப்பு குழந்தைகள் பள்ளி சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஐஸ்வர்யம் டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் பாலகுருசாமி தலைமை வகித்தார். மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அன்பழகன், மதுரை செய்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், பராமரிப்பில் உள்ள வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உள்ள 160 -க்கும் மேற்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டனர். சிறப்புக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர் வடமலை, சிறப்பு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "ஒரு மனிதன் சமூகத்தில் பணியாற்றும்போது இருக்கும் மரியாதை, பணி ஓய்வுக்கு பிறகு குறையும். அவர்களது வயோதிக காலத்தில் குழந்தைகள் அவர்களை கவனிக்க வேண்டும். அது அவர்களின் கடமை. 

ஆனால், பெற்றோர்களைக் கவனிக்காமல் பிள்ளைகளே ரோட்டோரத்தில் விட்டு விடுகிற நிலை அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு சேவை மனப்பான்மையோடு உள்ள தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருவது பாராட்டுக்குரியது. பொதுமக்களும் கருணை உள்ளத்தோடு சேவை செய்ய முன்வர வேண்டும்" என்று அவர் பேசினார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.