படமாத்தூர் சர்க்கரை ஆலையில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம், படமாத்தூரில் சர்க்கரை ஆலை உள்ளது. இங்குள்ள மொலாசஸ் சேமிப்பு டேங்கை 2 தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர்.அப்போது விஷவாயு தாக்கி சிவகங்கையைச் சேர்ந்த பொன்னழகு, கரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்