News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
உலகம்

காஸா அமைதிக்குழு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு

காஸா அமைதிக்குழு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு
0 கருத்துக்கள்

காஸா அமைதிக் குழுவில் இடம்பெற இந்தியா உள்பட 60 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் இஸ்​ரேல் ராணுவம், ஹமாஸ் குழு​வினர் இடையே போர் நடை​பெற்று வந்​தது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  முன் முயற்சியால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக  முதல்கட்டமாகபிணைக்கைதிகளை  ஹமாஸ் விடுவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

இந்த சூழலில்  ஹமாஸ்- இஸ்ரேல் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த ஒரு குழுவை அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைத்துள்ளார். இந்தக் குழுவில் இடம் பெற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்  அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், காஸா அமைதிக்கான குழுவில் இடம்பெறுமாறு அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். துருக்கி, எகிப்து, அர்ஜென்டினா, இந்தோனேசியா, இத்தாலி, மொராக்கோ, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 60 நாடுகளின் தலைவர்களை இந்த அமைதி குழுவில் சேருமாறு அமெரிக்கா அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!